சென்னையில் துப்பாக்கி முனையில் ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த பிரபல ரவுடி கைது!!!

சென்னையில் துப்பாக்கி முனையில் ரவுடி கைதுசென்னை, மே. 24–


சென்னையில் தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவில் உள்ள ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

கிழக்கு மண்டல பிரிவு இன்ஸ்பெக்டர் சிவராம்குமார், சப்–இன்ஸ்பெக்டர் ஆனந்குமார் மற்றும் போலீசார் டி.பி.சத்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். திடீரென அவன் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவனை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து பிடித்தனர்.

விசாரணையில் அவன் ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த பிரபல ரவுடி பிரபல ரவுடி டி.பி.சத்திரம் தட்சிணாமூர்த்தியின் கூட்டாளி தீச்சட்டி முருகன் என்பது தெரிந்தது. 

இவன் மீது 4 கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. ஏற்கனவே 3 முறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்று வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர் எஸ் எஸ் இயக்கம் மூன்று முறை இந்தியாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted by tamilnadu on 12:26 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "சென்னையில் துப்பாக்கி முனையில் ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்த பிரபல ரவுடி கைது!!!"

Leave a reply