மணிப்பூரில் காவி தீவிரவாதிகள் தாக்குதலில் கோவையைச் சேர்ந்த ராணுவ வீரர் பலி!!
இம்பால்: மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கோவையைச் சேர்ந்த ஜி. மோகனகுமார் (வயது 41) என்ற ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
மணிப்பூரின் சூரந்த்பூர் மாவட்டத்தில் சிங்காட் என்ற பகுதியில் கிராமம் ஒன்றில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் படைவீரர்கள் நேற்று ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது காவி தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜி. மோகனகுமார் (வயது 41) என்ற ராணுவ ஹவில்தார் படுகாயமடைந்தார்.
படுகாயமடைந்த நிலையில் அவர் ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் மெட்ராஜ் ரெஜிமெண்ட் படை வீரர்கள் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் கூர்கா ரைபிள்ஸ் படையினர்தான் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அண்மையில் மெட்ராஜ் ரெஜிமெண்ட் படையினர் இங்கு ரோந்து பணிக்கு மாற்றப்பட்டனர்.
0 comments for "மணிப்பூரில் காவி தீவிரவாதிகள் தாக்குதலில் கோவையைச் சேர்ந்த ராணுவ வீரர் பலி!! "