ஆர் எஸ் எஸ் தீவிரவாதி சரவணன் வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!!!

வேலூர் கரகாட்டக்காரி சகோதரி மகன் வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

வேலூர் கரகாட்டக்காரி சகோதரி மகன் ஆர் எஸ் எஸ் அமைப்பின்  பயங்கரவாதி  சரவணன் வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்



வேலூர், ஜுன்.1–

வேலூர் தாராபடவேடு கோவிந்தராஜ முதலி தெருவை சேர்ந்தவர் மோகனாம்பாள். கரகாட்டம் ஆடும் தொழில் செய்து வந்தார். இவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி பணம். 73 பவுன் நகைகளை சமீபத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் ரெய்டுக்கு வருவதை அறிந்த மோகனாம்பாள் அவரது சகோதரிகள் நிர்மலா, ஜமுனா, நிர்மலா மகன் பயங்கரவாதி சரவணன், அவரது மனைவி தேவிபாலா, அவரது தம்பி காந்தி, மோகனாம்பாளின் தோழி ரோஸ் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.

சாதாரணமாக கரகாட்டம் ஆடும் ஒரு பெண் வீட்டில் இவ்வளவு பணம், நகைகள் எப்படி வந்தது என்பது போலீசாருக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர்கள் பிடிப்பட்டால்தான் ரூ.4 கோடி பணத்திற்கான தகவல்கள் தெரியவரும். இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவான கும்பலை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் வேலூர் புதிய பஸ்நிலையத்தில் பயங்கரவாதி  சரவணின் மனைவி தேவியை போலீசார் பிடித்தனர். பின்னர் தேவிபாலா முன்னிலையில் வசந்தபுரத்தில் உள்ள நிர்மலா வீடு, கஸ்பாவில் உள்ள பயங்கரவாதி சரவணன் வீடுகளை போலீசார் சோதனையிட்டனர்.

இதில் நிர்மலா வீட்டில் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சரவணன் வீட்டில் நடத்திய சோதனையில் அங்குள்ள அறையில் 4 கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த ஆயுதங்கள் செம்மர கடத்தலில் ஈடுபட மலை கிராம தொழிலாளிகள் பயன்படுத்துவது என தெரியவந்தது.

இதனையடுத்து அந்த வீட்டுக்கு போலீசார் சீல் வைத்தனர். மேலும் கணவனின் சட்ட விரோத செயல்களை தெரிந்திருந்தும் அதனை மறைத்த குற்றத்திற்காக தேவிபாலாவை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில்:– பயங்கரவாதி சரவணன் செம்மரம் கடத்தலில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சரவணன் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். சரவணன், மோகனாம்பாள் செம்மர கடத்தலில் ஈடுபட்டு அதில் வந்த பணத்தையும், கந்து வட்டி தொழிலில் வந்த பணத்தையும் அந்த வீட்டில் பதுக்கி வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் மோகனாம்பாள் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரம் மற்றும் 73 பவுன் நகைகளை காட்பாடி கோர்ட்டில் நாளை போலீசார் ஒப்படைக்க உள்ளனர்.

இதற்கிடையே மோகனம்பாள் முன்ஜாமீன் பெற சென்னையில் முகாமிட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் சென்னையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

முன்ஜாமீன் பெறுவதற்கு முன்னர் அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.

மற்றும் இவர்கள் இதில் வரும் தொகை ஒரு பெரிய பங்கு ஆர் எஸ் எஸ் தீவிரவாத அமைப்பு தமிழகத்தில் மேலும் வலுப்பெற கொடுத்துவந்தது உள்ளனர்.

Posted by tamilnadu on 12:34 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "ஆர் எஸ் எஸ் தீவிரவாதி சரவணன் வீட்டில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!!!"

Leave a reply