புனே: முஸ்லிம் வாலிபர் படுகொலை...சிவசைனிக் பயங்கரவாதிகள் வெறியாட்டம்...
புனே: முஸ்லிம் வாலிபர் படுகொலை...சிவசைனிக் பயங்கரவாதிகள் வெறியாட்டம்...
கடந்த வாரம் சனிக்கிழமை அன்று மராட்டிய சிவாஜி மற்றும் சிவசேனா நிறுவனர் பால்தாக்ரே ஆகியோரை இழிவுபடுத்தும் விதமாக கணினியில் மார்ஃபிங்க் செய்யப்பட்ட புகைப்படத்தை ஏதோ ஒரு விஷமி முகநூலில் பரப்பி இருக்கிறான்…இதனை தொடர்ந்து சனிக்கிழமை இரவு முதல் புனே மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சிவ சைனிக் அமைப்பை சேர்ந்த காவி பயங்கரவாதிகள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்…
இக்கலவரத்தில் இப்புகைப்படத்தை பரப்பியதாக கூறி IT துறையில் வேலை செய்து வரும் 24 வயதான மொஹ்ஸீன் சாதிக் ஷெக் என்ற நபரை சிவ சைனிக் காவி பயங்கரவாதிகள் அடித்தே கொலை செய்துள்ளனர். தொழுகை முடிந்து நண்பர் ரியாஜ் உடன் வீடு திரும்ம்பி கொண்டிருந்த அவரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர். இது குறித்து ரியாஜ் கூறுகையில் சாதிக் தாடியுடனும் தலையில் தொப்பியுடனும் இருந்ததை கண்ட பயங்கரவாதிகள் அவரை தாக்கினர் என்றார். தாக்குதலுகுள்ளான ரியாஜ் படுகாயங்களுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
காவல் துறையின் விசாரணையில் இப்புகைப்படம் வெளியிட்ட முகநூல் பக்கம் சில வருடங்களுக்கு முன்னறே ஆரம்பிக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது. அந்த பக்கம் இந்த புகைப்படத்தால் தற்போது முடக்கப்பட்டது. இப்புகைப்படத்தை வெளியிட்டது முஸ்லிம் நபர் அல்ல. அவர் ஒரு ஹிந்து என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முகநூல் ஒரு அமெரிக்க நிறுவனம், எனவே அந்நிறுவனம் ஒரு தனி நபரின் விபரங்களை தர மறுத்ததன் அடிப்படையில் கணினியின் IP முகவரியை வைத்து அந்த நபர் பயண்படுத்திய கணினி மற்றும் செல்பேசி ஆகியவற்றை ஆராய்ந்து வருகின்றனர்.
இக்கலவரத்தினால் புனேயில் உள்ள மஸ்ஜிதுல் தன்சீமுல் முஸ்லிமீன், தாருல் உலூம் அஷ்ரபிய்யா, லாண்டேவாடி, பூசரியா போன்ற பள்ளிவாசலுக்குள் நுழைந்த 500 க்கும் மேற்பட்ட காவி குண்டர்கள், பள்ளியின் திரைச்சீலைகள் உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியுள்ளனர். பீர்ஷா ஜலாலுத்தீன் காதிரி 'தர்கா'வும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
நூர் முஹல்லா பள்ளிவாசலுக்குள் வீச்சறுவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடனும், பெட்ரோல் குண்டுகளுடனும் நுழைந்த கும்பல், கப்ருஸ்தானை சேதப்படுத்தியும், தண்ணீர் டாங்கிகளை உடைத்தும், முஸ்லிம்களை பீதிவயப்படுத்தியுள்ளனர்.
பள்ளிக்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த 25 வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டு விட்டது.
குர்வே ரோடு பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான 20 பேக்கரிகள் சேதப்படுத்தப்பட்டுள்ள அழிவின் மதிப்பீடு மட்டும் பல கோடிகளை தாண்டும் என்கின்றனர்.
அது மட்டும் இன்றி புனேயில் 193 பேருந்துகளும் கொஹல்பூரில் 200 பேருந்துகளும் தீயிட்டு குளுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஹிந்து ராஷ்ட்ர சேனாவை சார்ந்த 7 பேர் மற்றும் அதன் தலைவரான தஞ்சாய் தேசாய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி கொடூரமான முறையில் எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு முஸ்லிம் இளைஞரை கொலை செய்து 400க்கும் மேற்ப்பட்ட பேருந்துகள் மற்றூம் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொது சொத்துக்கு சேதாரம் விளைவித்த பயங்கரவாதிகள் இந்த நாட்டை காப்பற்ற போகிறார்களாம்…தேச பக்தர்களாம்…..
0 comments for "புனே: முஸ்லிம் வாலிபர் படுகொலை...சிவசைனிக் பயங்கரவாதிகள் வெறியாட்டம்..."