காஸ்மீரிகளின் முழக்கம். “எங்கள் தேசம் காஸ்மீர் தேசம். இந்திய நாய்களே திரும்பி செல்லுங்கள்”



காஸ்மீரிகளின் முழக்கம். “எங்கள் தேசம் காஸ்மீர் தேசம். இந்திய நாய்களே திரும்பி செல்லுங்கள்”

 0 2
காஸ்மீர் தேசத்திற்கான சிறப்பு அதிகாரத்தை இரத்து செய்வது குறித்து பதவியேற்றவுடன் கொளுத்திபோட்டிருக்கிறது  இந்திய அரசு.
காஸ்மீரிகளின் நியாமான பல போராட்டங்களை ஒடுக்கி, காஸ்மீர் முழுவதும் இராணுவமயமாக்கி, பெரும் ஒடுக்கு முறைகளுக்கு ஆட்படும் மக்களுக்கு மேலும் ஒரு இடியாய் இந்த செய்தியை பிஜேபி அரசு பரிசலித்திருக்கிறது.

ஈராக்கில் 166 பேருக்கு ஒரு சிப்பாய் என்ற எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவம் நிலைகொண்டுள்ளது , காஷ்மீரிலோ 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இந்திய இராணுவம் நிலைகொண்டுள்ளது. அதனை அமெரிக்க ஆக்கிரமிப்பு எனும்பொழுது, காஷ்மீர் நிலையை இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிடாமல் வேறெப்படிக் கூற முடியும்?தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரிலும், பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரிலும் திணிக்கப்பட்டுள்ளது இந்த ஆக்கிரமிப்பு,
1987ஆம் ஆண்டில் இருந்து 2010மாண்டு வரை காஸ்மீரில் கொல்லப்பட்ட மக்கள் 93,214 பேர்.

விசாரனை என்ற பெயரில் கொண்டு செல்லப்பட்டு கொல்லப்பட்டவர்கள் 6,969 பேர்.

1987ல் இருந்து 2010 சூலை வரையிலான தகவல்கள் இவை. 2010 சூலையிலிருந்து இறந்த பொதுமக்களின் எண்ணிக்கையை மேலே நான் கொடுத்துள்ளேன்.

விதவைகளாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 22,726

கைது செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 1,17,117

அநாதையாக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 1,07,347

பாலியல் வல்லுறவுக்கு ஆக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 9,912
இந்த கணக்குகள் தோராயமான கணக்குகளே.
1987-ஆம் ஆண்டு தொடங்கி 2010-ஆம் ஆண்டு முடிய 20 ஆண்டுகளில் இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் அம்மாநில போலீசும் நடத்திய துப்பாக்கி சூடுகள், போலி மோதல்கள், இரகசியக் கொலைகள், கொட்டடிச் சித்திரவதைகளில் ஏறத்தாழ 70,000-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அரசுப் படைகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8,000 காஷ்மீரிகள் சுவடே தெரியாமல் ‘காணாமல்’ போய்விட்டனர். அப்படைகள் நடத்தியிருக்கும் பாலியல் வல்லுறவுகள் இந்தக் கணக்கில் அடங்காது. என்று மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

அம்மாநிலத்தில் பல ஆண்டுகளாக அமலில் இருந்துவரும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவச் சிப்பாய்கள் மீது, இந்திய அரசின் அனுமதியின்றி அம்மாநில அரசு புகார்கூடச் செய்ய முடியாது என்ற பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. தேசிய நலன் என்ற பெயரில் இராணுவச் சிப்பாய்கள் நடத்தும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு பற்றி காஷ்மீரத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் புகார் கொடுக்க வேண்டும் என்றால், அவர் முதலில்
“தான் இந்திய தேசிய நலனுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை” என்று நிரூபித்தாக வேண்டும்.

காஸ்மீரிகள் தங்களின் தனித்த தேசிய அடையாளத்தை துறந்து இந்திய தேசியத்தை ஏற்றுக்கொண்டால்தான் தங்களின் மீதான வன்முறைகளுக்கு எதிராக கூட முறையிடமுடியும்.
பன்னாட்டு முதலைகள், அம்பானி,அதானி வகையாறாக்களின் வேட்டை காடாக மாற்ற திட்டிமிடலின் ஒரு பகுதிதான் சிறப்பு உரிமைகளை திரும்ப பெறபோவதாகவும், அதற்கான பொதுவிவாதத்தை ஆரம்பிக்கப்போவதாகவும் இந்திய பிஜேபி அரசு சொல்வதற்கான பின்னனியை நாம் பார்க்கவேண்டும்.

இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் ஒப்புக்கொண்டபடி ஜம்மு-காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நடத்தாமல் இதுவரை இந்தியாவின் ஒரு பகுதி என்று அடம்பிடித்தும்,  இந்திய அரசியல் சாசனத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சில தனியுரிமைகளை நீர்த்துப் போகச் செய்யும் வேலைகளை காங்கிரசு அரசு என்றாலும், பிஜேபி அரசு என்றாலும் அடிப்படை நேர்மை இன்றி  செய்து வரும் அயோக்கியதனங்களை  பிரித்துபார்க்கமுடியாது.

நல்ல தொடக்கமாக காஸ்மீர் என்ற தேன்கூட்டின் மீது இந்திய அரசு கல்லெறிந்து விட்டது.

அந்த மக்களின் நீண்ட நாள் முழக்கமான “எங்கள் தேசம் காஸ்மீர்  தேசம். இந்திய நாய்களே திரும்பி செல்லுங்கள்”
“இப்பொழுதே வேண்டும் விடுதலை!”
இந்த முழக்கம் மீண்டும் பள்ளதாக்கு எங்கும் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது.
அவர்களின் தேசம் விடுதலையடையட்டும்…
எம் தேசத்தை அங்கிகரிக்கும் முதல் தேசமாக தமிழீழமும்,காஸ்மீரும் மாறட்டும்

“எங்கள் நாடு தமிழர் நாடு”
”இந்தியா என்பது அண்ணிய நாடு” என்ற முழக்கம் எம் தமிழர் தேசத்தில் எதிரொலிப்பது எப்பொழுது..?
நன்றி : எல்லன் எழுகதிர்.

Posted by tamilnadu on 7:01 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for " காஸ்மீரிகளின் முழக்கம். “எங்கள் தேசம் காஸ்மீர் தேசம். இந்திய நாய்களே திரும்பி செல்லுங்கள்”"

Leave a reply