அகண்ட பாரதமும் மோடியின் பதவியேற்பு விழாவும் ..!



அகண்ட பாரதமும் மோடியின் பதவியேற்பு விழாவும் ..!

நாடாளுமன்ற தேர்தலில் மிருகபலத்துடன் வெற்றி பெற்று பிரதமராக வரும் திங்களன்று நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். இவ்விழாவில் கலந்துகொள்ளும்படி இதற்கு முன்னர் இல்லாத புதிய அணுகுமுறையாக தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது .

தேசவிரோத செயல்களில் ஈடுபட்டகுற்றத்திற்காக இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் பிரிவான பாஜக வலதுசாரி ஹிந்துத்வா சிந்தனை கொண்டது என்பது அனைவரும் நன்கு அறிந்ததே .ஆர்.எஸ்.எஸ் இன் நோக்கம் அகன்ற பாரதம் அமைப்பது .அதாவது இலங்கை ,பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான்,வங்காளதேசம் போன்ற நாடுகளை போரிட்டு இந்தியாவுடன் இணைப்பதே இதன் பிரதான கொள்கை .

தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பில்
ஆப்கானிஸ்தான்,வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மால தீவுகள் நேபாளம்,பாகிஸ்தான்,இலங்கைஎன எட்டு நாடுகள் உறுப்பினர்களாகவும் ,சீனா ,ஜப்பான் ,தென்கொரியா,ஈரான் ,ஐரோப்பிய ஒன்றியம் என ஐந்து நாடுகள் பார்வையாளர்களாக உள்ளது.

மோடியின் பதவியேற்பு விழாவிற்கு இந்த நாடுகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.நன்கு கவனியுங்கள்.அழைப்பு விடப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலை பாருங்கள்.அவை அனைத்தும் அகன்ற பாரதத்தில் இணைக்க ஆர்.எஸ்.எஸ். சபதம் மேற்கொண்டுள்ள நாடுகள்.

பாரதீய ஜனதாவை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். எனும் ஹிந்துத்வா வெறி இயக்கமே என்பது அனைவருக்கும் புரியும் .இது ஒரு துவக்கம் தான் ..இனிமேல் தான் இருக்கிறது அதிரடி..அவை இந்தியாவின் இறையாண்மைக்கும் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் வைக்கப்படும் சரவெடி

Posted by tamilnadu on 8:26 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "அகண்ட பாரதமும் மோடியின் பதவியேற்பு விழாவும் ..!"

Leave a reply