நிகோலஸ் கோபர்னிக்கஸ் எனும் இணையற்ற வானியல் வல்லுநர்!!!

நிகோலஸ் கோபர்னிக்கஸ் எனும் இணையற்ற வானியல் வல்லுநர் மறைந்த தினம் இன்று

. கிரேக்கத்தின் தத்துவம்,அறிவு ஆகியன உலகை கட்டிப்போட்டிருந்தன . அவர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்றே யாவரும் எண்ணினார்கள் .
அரிஸ்டாட்டில் வானியலுக்கு சில விஷ்யங்களை வகுத்து தந்துவிட்டு போனார் .

பூமி தான் இந்த மண்டலத்தின் மையப்புள்ளி ;நம் பூமி
நிலம்,நீர்,காற்று,நெருப்பு ஆகியவற்றால் உருவாகி உள்ளது .அதை சுற்றி பிற கிரகங்கள் சுழல்கின்றன என சொன்னார் . அவை பூமியை சுற்றி கச்சிதமான
வட்டப்பாதைகளில் சுழல்வதாக மனிதர் சொல்லிவிட்டு போனார் . வந்தார் தாலமி ; கிரகங்கள் பூமியை கச்சிதமான வட்டப்பாதையில் சுற்றிவந்து கொண்டிருப்பது
உண்மையானால் ஏன் கிரகங்கள் ஒரே மாதிரியான சுற்றுப்பாதையில் பயணிப்பதில்லை
என்கிற கேள்வி எழுந்தது .அதற்கு பதில் தந்தார் தாலமி ;குறிப்பிட்ட ஒரு சுற்றுப்பாதை மட்டும் வட்டமாக இருக்கும் அதை சுற்றி வருகிற பொழுது
மட்டும் கோள்கள் நமக்கு பூமியை சுற்றுவதை உணர முடியும் ;வேறு சில சமயங்களில் பிற பாதையில் பயணிப்பதால் ஒழுங்கற்றதாக அதன் இயக்கம் படுகிறது என்றார் . ஈக்குவண்ட் என்கிற புள்ளியை உருவாக்கி அப்புள்ளியில்
மட்டும் இவ்வாறு வட்டப்பாதையில் நகர்தல் நிகழும் என்றார் .

கோபர்நிக்கஸ் வந்தார் ;நல்ல வளமிகுந்த குடும்பத்தில் போலந்து நாட்டில் பிறந்திருந்தார் அவர் .அப்பா அம்மாவின் மறைவுக்கு பின் மாமாவின் கவனிப்பில் வளர்ந்த கோபர்னிக்கஸ் பாதிரியார் ஆனார் செல்வவளத்துக்கு
குறைவில்லாமல் வாழ்க்கை நகர்ந்தது . பாதிரியாரான இவர் கிறிஸ்துவ சட்டங்களை கற்றுத்தேற கல்லூரி போனார் . அங்கு நோவரா எனும் வானியல் பேராசிரியரை கல்லூரி வாழ்க்கையின் பொழுது சந்தித்தார் ;அவர்தான்
தாலமியின் கருத்துக்களை விமர்சனத்துக்கு உள்ளாக்கி பார்க்க வேண்டும் என்றார் .

இவர் மருத்துவம் படிக்க வேறொரு கல்லூரிக்கு போனார் ;அப்பொழுது வானியலும்,மருத்துவமும் ஒன்றுக்கு ஒன்றுக்கு இணைந்தவை எனக்கருதப்பட்டு வானியல் போதிக்கப்பட்டது .அங்கே கற்றுத்தேர்ந்த இவர் ;தாலமியின்
கருத்துக்கள் தவறு என்றார் .

பைபிளை கற்ற மதகுரு என்றாலும் அதில் சொல்லிய பூமி தான் மையம் அதைச்சுற்றி தான் சூரியன் சுழல்கிறது எனும் கருத்தை மறுதலித்தார் ;சூரியன் தான் மையம்
அதைசுற்றி தான் மற்ற கோள்கள் சுழல்கின்றன அண்டம் மிகப்பெரிது அதில் சூரிய
குடும்பம் மிக மிக சிறியது என அடித்து சொன்னார் . தான் எழுதியதை அப்பொழுது தான் பிறந்த அச்சுத்துறையின் ஆன் தி ரெவலுஷன்ஸ் எனும் நூலாக வடித்தார் . இவரின் கருத்தை ஒட்டி அதையே சொன்ன ப்ரூனோ எரித்து
கொல்லப்பட்டார் ;கலிலியோ சிறைப்படுத்தப்பட்டார் . ஆனாலும்,உண்மையை பல்லாண்டுகள் கடந்து உலகம் ஏற்றுக்கொண்டது .

Posted by tamilnadu on 9:25 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "நிகோலஸ் கோபர்னிக்கஸ் எனும் இணையற்ற வானியல் வல்லுநர்!!!"

Leave a reply