நிகோலஸ் கோபர்னிக்கஸ் எனும் இணையற்ற வானியல் வல்லுநர் மறைந்த தினம் இன்று
. கிரேக்கத்தின் தத்துவம்,அறிவு ஆகியன உலகை கட்டிப்போட்டிருந்தன . அவர்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்றே யாவரும் எண்ணினார்கள் .
அரிஸ்டாட்டில் வானியலுக்கு சில விஷ்யங்களை வகுத்து தந்துவிட்டு போனார் .

பூமி தான் இந்த மண்டலத்தின் மையப்புள்ளி ;நம் பூமி
நிலம்,நீர்,காற்று,நெருப்பு ஆகியவற்றால் உருவாகி உள்ளது .அதை சுற்றி பிற கிரகங்கள் சுழல்கின்றன என சொன்னார் . அவை பூமியை சுற்றி கச்சிதமான
வட்டப்பாதைகளில் சுழல்வதாக மனிதர் சொல்லிவிட்டு போனார் . வந்தார் தாலமி ; கிரகங்கள் பூமியை கச்சிதமான வட்டப்பாதையில் சுற்றிவந்து கொண்டிருப்பது
உண்மையானால் ஏன் கிரகங்கள் ஒரே மாதிரியான சுற்றுப்பாதையில் பயணிப்பதில்லை
என்கிற கேள்வி எழுந்தது .அதற்கு பதில் தந்தார் தாலமி ;குறிப்பிட்ட ஒரு சுற்றுப்பாதை மட்டும் வட்டமாக இருக்கும் அதை சுற்றி வருகிற பொழுது
மட்டும் கோள்கள் நமக்கு பூமியை சுற்றுவதை உணர முடியும் ;வேறு சில சமயங்களில் பிற பாதையில் பயணிப்பதால் ஒழுங்கற்றதாக அதன் இயக்கம் படுகிறது என்றார் . ஈக்குவண்ட் என்கிற புள்ளியை உருவாக்கி அப்புள்ளியில்
மட்டும் இவ்வாறு வட்டப்பாதையில் நகர்தல் நிகழும் என்றார் .

கோபர்நிக்கஸ் வந்தார் ;நல்ல வளமிகுந்த குடும்பத்தில் போலந்து நாட்டில் பிறந்திருந்தார் அவர் .அப்பா அம்மாவின் மறைவுக்கு பின் மாமாவின் கவனிப்பில் வளர்ந்த கோபர்னிக்கஸ் பாதிரியார் ஆனார் செல்வவளத்துக்கு
குறைவில்லாமல் வாழ்க்கை நகர்ந்தது . பாதிரியாரான இவர் கிறிஸ்துவ சட்டங்களை கற்றுத்தேற கல்லூரி போனார் . அங்கு நோவரா எனும் வானியல் பேராசிரியரை கல்லூரி வாழ்க்கையின் பொழுது சந்தித்தார் ;அவர்தான்
தாலமியின் கருத்துக்களை விமர்சனத்துக்கு உள்ளாக்கி பார்க்க வேண்டும் என்றார் .

இவர் மருத்துவம் படிக்க வேறொரு கல்லூரிக்கு போனார் ;அப்பொழுது வானியலும்,மருத்துவமும் ஒன்றுக்கு ஒன்றுக்கு இணைந்தவை எனக்கருதப்பட்டு வானியல் போதிக்கப்பட்டது .அங்கே கற்றுத்தேர்ந்த இவர் ;தாலமியின்
கருத்துக்கள் தவறு என்றார் .

பைபிளை கற்ற மதகுரு என்றாலும் அதில் சொல்லிய பூமி தான் மையம் அதைச்சுற்றி தான் சூரியன் சுழல்கிறது எனும் கருத்தை மறுதலித்தார் ;சூரியன் தான் மையம்
அதைசுற்றி தான் மற்ற கோள்கள் சுழல்கின்றன அண்டம் மிகப்பெரிது அதில் சூரிய
குடும்பம் மிக மிக சிறியது என அடித்து சொன்னார் . தான் எழுதியதை அப்பொழுது தான் பிறந்த அச்சுத்துறையின் ஆன் தி ரெவலுஷன்ஸ் எனும் நூலாக வடித்தார் . இவரின் கருத்தை ஒட்டி அதையே சொன்ன ப்ரூனோ எரித்து
கொல்லப்பட்டார் ;கலிலியோ சிறைப்படுத்தப்பட்டார் . ஆனாலும்,உண்மையை பல்லாண்டுகள் கடந்து உலகம் ஏற்றுக்கொண்டது .





pirates



கடற்கொள்ளையரால் குமரி மீனவர் சுட்டு கொலை!!!

பக்ரைனில் கடற்கொள்ளையர்களால் குமரி மாவட்ட மீனவர் தாமஸ் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் உயிரிழந்த தாமஸ் நாகர்கோவில் அருகே ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்தவர் ஆவார். உயிரிழந்த தாமஸ் பக்ரைனில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார்.


லிபியாவில் #Libya, சி.ஐ.ஏ. அனுசரணையுடன் ஒரு சதிப்புரட்சி நடந்துள்ளது? சில தினங்களுக்கு முன்னர், பெங்காசி நகரின் மீது, "லிபிய தேசிய இராணுவம்" தாக்குதல் நடத்தியது. பெங்காசி நகரில் ஆதிக்கம் செலுத்தும், இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுதக் குழுக்களை ஒழித்துக் கட்டுவதற்கான யுத்தம் என்று அறிவிக்கப் பட்டது. 

பெருந்தொகை படையினர், விமானத் தாக்குதல்கள் என்று, ஒரு மரபுவழி இராணுவம் நடவடிக்கை எடுப்பதைப் போன்று, அந்த இராணுவ தாக்குதல்கள் அமைந்திருந்தன. ஆனால், "லிபிய தேசிய இராணுவம் என்பது, லிபிய அரசாங்கம் அனுப்பிய இராணுவம் அல்ல, அதுவும் ஒரு ஆயுதக் குழு தான்" என்று, லிபிய அரசு அறிவித்தது. இது நடந்து சில நாட்களில், திரிபோலி நகரில் லிபிய பாராளுமன்றம் சுற்றிவளைக்கப் பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் வீட்டுக்கு அனுப்பப் பட்டனர். அந்த சம்பவங்கள் யாவும், லிபியாவில் ஒரு சதிப்புரட்சி நடந்திருப்பதைக் காட்டுகின்றன.

யார் அந்த சதிப்புரட்சியாளர்கள்? ஜெனரல் கலிபா ஹிப்தர் தலைமை தாங்கும் ஆயுதக்குழு தான், "தேசிய இராணுவம்" என்ற பெயரில், பெங்காசி மீது படையெடுத்திருந்தது. ஹிப்தர், முன்பு கடாபியின் அரசில் பணியாற்றியவர். எண்பதுகளில் நடந்த, லிபிய - சாட் எல்லைப் போரில் பங்குபற்றியவர். அன்று நடந்த போரில், ஹிப்தரும், 6௦௦ லிபியப் படையினரும், சாட் படைகளினால் சிறைப் பிடிக்கப் பட்டனர்.

சாட் நாட்டில் அன்றிருந்த அரசாங்கத்தை, அமெரிக்காவும், பிரான்சும் ஆதரித்து வந்தன. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக, ஹிப்தரும், 350 லிபிய படையினரும் விடுதலை செய்யப் பட்டனர். அவர்களைக் கொண்டு, "லிபிய தேசிய மீட்பு முன்னணி" (National Front for the Salvation of Libya) என்ற அமைப்பு உருவாக்கப் பட்டது. சாட் நாட்டில் நடந்த ஆட்சி மாற்றம் காரணமாக, அவர்கள் அமெரிக்காவுக்கு சென்று விட்டனர். சி.ஐ.ஏ. தலைமையகத்திற்கு பக்கத்தில் தான், ஹிப்தரின் குடியிருப்பும் இருந்தது.

2011 வரையில், ஹிப்தர் எந்த அரசியல்-இராணுவ நடவடிக்கையிலும் இறங்கியதாகத் தெரியவில்லை. கடாபி அரசுக்கு எதிரான உள்நாட்டுப் போர் தொடங்கியதும், ஹிப்தர் தலைமையிலான ஆயுதக் குழுவும் லிபியாவில் குதித்தது. லிபியாவில் கடாபி ஆட்சி கவிழ்க்கப் பட்டாலும், எதிராளிகள் மத்தியில் ஒற்றுமை இருக்கவில்லை. பல நூறு ஆயுதக் குழுக்கள், ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதனால், பல வருடங்களாக, லிபியாவில் ஸ்திரமான ஆட்சி ஏற்படவில்லை.

தற்போது, லிபியாவில் மீண்டும் ஒரு சர்வாதிகாரியை கொண்டு வருவதற்கு சி.ஐ.ஏ. முயற்சிப்பதாகத் தெரிகின்றது. சி.ஐ.ஏ. தான், ஹிப்தர் குழுவை பின்னால் இருந்து இயக்குவதாக பலர் நம்புகின்றனர். இந்த யுத்தம் ஆரம்பிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், லிபியாவுக்கு அண்மையில், தென் இத்தாலியில் உள்ள, சிசிலி தீவில் 200 அமெரிக்கப் படையினர் வந்திறங்கினார்கள். லிபியாவில் உள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தை பாதுகாப்பதற்காக தருவிக்கப் பட்டதாக தெரிவிக்கப் பட்டது.

china

தென்கிழக்காசியாவையும் இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகளையும் துறைமுகங்கள் மற்றும் கடல்வழி இணைப்பை ஏற்படுத்தும், சீனாவின் இலட்சியமான கடல்வழி பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்துவதற்கு முன்னோடியாக 1.6 பில்லியன் டொலர் நிதியத்தை சீனா நேற்று உருவாக்கியுள்ளது.
இந்த 1.6 பில்லியன் டொலர் நிதியம், பட்டுப்பாதை திட்டத்தின் கீழ் உள்ள உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு உதவியாக இருக்கும்.
பட்டுப்பாதைத் திட்டத்தின் மூன்று முக்கியமான பிராந்தியங்களில் ஒன்றான, சீனாவின் கரையோர பியூஜியன் மாகாணத்தில் இதுதொடர்பான உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசாங்கத்தின் மிக முக்கியமான திட்டமாக இந்த கடல் பட்டுப்பாதை திட்டம் அமையவுள்ளது.
சீனாவையும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தையும் இணைத்த பழங்கால பட்டுப்பாதையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, இந்தியப் பெருங்கடலில் உள்ள தென்கிழக்காசிய நாடுகளையும் தனது கரையோரப் பகுதிகளுடன் இணைக்கும் சுதந்திர வர்த்தக வலயங்களை உருவாக்குவதிலும் சீனா ஆர்வம் கொண்டுள்ளது.
சீனா ஏற்கனவே துறைமுக கட்டுமானங்களில் ஈடுபட்டுள்ள, பாகிஸ்தான், சிறிலங்கா, பங்களாதேஸ், ஆகிய நாடுகளில் இந்த உட்கட்டுமான திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளன.
எவ்வாறாயினும் இந்த திட்டம் தொடர்பாக இந்த மாத முற்பகுதியில், சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா வெளியிட்ட வரைபடத்தில் பாகிஸ்தானின் குவடார் துறைமுகம் இடம்பெறவில்லை.
நெருக்கமான வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்த சீனா விரும்பும் துறைமுகங்களாக, கொல்கத்தாவும், கொழும்பும் குறிப்பிடப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Wreckage of burnt vehicle after blasts at Terminus market in Jos, Nigeria

மத்திய நைஜீரிய நகரமான ஜோஸ் இல் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தபட்சம் 118 பேர் உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. பயணிகளும், வர்த்தகர்களுன் நிறைந்திருந்த வர்த்தக நகரில் இடம்பெற்ற இக்குண்டுவெடிப்பை இதுவரை யாரும் உரிமைகோரவில்லை எனினும் போக்கோ கராம் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் நடவடிக்கையாகவே இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
‘ஜோஸ் நகரில் உள்ள சந்தைப்பகுதியில், நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட லாரி ஒன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெடித்துச் சிதறியது. இந்தத் தாக்குதல் நடைபெற்ற 20 நிமிடங்கள் கழித்து, வெடிகுண்டு நிரப்பப்பட்ட மினி பேருந்து ஒன்று வெடித்து சிதறியது.
இந்த இரட்டை குண்டுவெடிப்பில் சிக்கி, அப்பகுதிகளில் நின்றுகொண்டிருந்த 116 பேர் உடல் சிதறி பலியாகினர். மேலும், 45 பேர் படுகாயமடைந்தனர். தாக்குதல்களில் பலியானவர்களில் பெண்களே அதிகம்.’ என நாட்டின் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க அரசு நைஜீரியாவிற்கு இராணுவத்தையும் பாதுகாப்பு ஆலோசகர்களையும் அனுப்பிவைத்துள்ளது. பிரித்தானிய அரசும் அமெரிக்காவைப் தொடர்ந்து பாதுகாப்புப் படைகளை அனுப்பிவைத்துவிட்டு தாம் வாஷிங்டனுடன் இணைந்து வேலைசெய்வோம் என்கிறது.
இவ்வாறான சூழலிலேயே இக் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் போக்கோ ஹராம் அமைப்பை வளர்த்தன் பின்புலத்தில் யார் செயற்பட்டார்கள் என்பது பிரதானமான கேள்வி.

அந்த அமைப்பிற்கு ஆயுதம் மற்றும் பண உதவிகளை சவூதி அரேபியாவிலுள்ள பல இஸ்லாமிய நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. சிரியாவில் அசாத்தின் சர்வாதிகார அரசிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்துவரும் அமெரிக்க ஆதரவு இஸ்லாமியப் பயங்கரவாதக் குழுக்களுக்கும் இதே சவூது அரேபியக் குழுக்கள் தான் உதவி செய்து வருகின்றன. அமெரிக்காவின் நெருங்கிய பங்காளி நாடான சவூதி அரேபியா, மத்திய கிழக்கில் அமெரிக்க சார்பு அரசுகளுக்கு இராணுவ உதவியும், அமெரிக்காவிற்கு எதிரான நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கும் பணம் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
2012 ஆம் ஆண்டு அமெரிக்க ஹில்லாரி கிளிங்டன் பதவியிலிருந்த வேளையில் போக்கோ ஹராம் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றாக தரப்படுத்துவதற்கு மறுப்பு வெளியிட்டார். அதனை பயங்கரவாத அமைப்பாகத் தடைசெய்யுமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அதனை மிகவும் தீவிரமாக அவர் மறுத்தார். தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க எண்ணிய போது மட்டுமே அமெரிக்க அரசு பயங்கரவாத அமைப்பாகத் தடை செய்தது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு படுகாயமடைந்தோரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


இவரை பற்றி தெரிமா...?

இவர் யார் என்று தெரிந்தால்...கண்டிப்பாக பாராட்டுவீர்கள்..இவர் டாக்டர் Jonas Salk. இவர் தான்..பல உயிர் பலிகளையும் உடல் உறுப்புக்கள் செயல் இழப்பதை தடுக்கும்..போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர்...இவரை பற்றி பகிர்வதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்..

இவர் தான் உண்மையான ஆக்‌ஷன் ஹீரோ...

மலேசிய விமானம் MH370 காணாமல் போய் 68 நாட்களுக்கு மேலாகிவிட்டது.
 இந்து சமுத்திரத்தில் தற்போது தேடப்பட்டு வரும் கடற்பகுதியிலிருந்து சுமார் 1400 கி.மீ வடக்கில் விமானத்தின் உதிரிப் பாகங்கள் இருக்கலாம் என  இந்தியாவின் கோயம்புத்தூரைச் சேர்ந்த விஞ்ஞானி ஜெயாபிரபு தெரிவித்துள்ளார்.

சீனாவின் கட்டற்படைக் கப்பல் ஒன்று தொடர்ந்து இவ்விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அதன் சிறிய நீர்மூழ்கி கப்பல் ஒன்று தேடுதலில் ஈடுபட்ட போது சேதமானதால் ஆஸ்திரேலிய கடற்படைத் துறைமுகத்திற்கு திருத்தப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதோடு ஆஸ்திரேலிய - சீன மீட்பு படைகள் தேடுதலை தொடர்ந்து முன்னெடுக்க பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையிலேயே இந்தியாவைச் சேர்ந்த அறிவியலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 8ம் திகதி காணாமல் போன குறித்த மலேசிய விமானத்தில் 239 பயணிகள் சென்றனர். அவர்களில் ஐவர் இந்தியர்கள் ஆவார்கள்.


"பேஸ்புக்கில் இணைந்ததால் சிரியாவில் ஒரு பெண் கல்லால் அடித்துகொலை"

மேற்படி தலைப்பில் ஒரு தகவல் பேஸ்புக்கிலும் இணையத்தளங்களிலும் மிக வேகமாக பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனை சில இணையத்தளங்களும், முகநூல் குழுமங்களும் எவ்வித ஆதாரமும் இன்றி, கொஞ்சமும் ஆராயாமல் வெளியிட்டு வருகின்றன.

சிரியா இஸ்லாமிய முஜாஹிடீன்களையும், இஸ்லாமிய போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக மேற்படி தகவல் ஷீஆ ஆதரவு ஊடகங்களால் உருவாக்கப் பட்டு பரப்பப் பட்டு வருகின்றது. அதன் உண்மை தன்மையை அறியாமல், ஆராயாமல் பல்வேறு தரப்புக்களாலும், தனிநபர்களாலும் மீண்டும் மீண்டும் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. அந்தத்தகவல் முற்றிலும் பொய்யானதாகும்! எவ்வித ஆதாரமுமற்றதாகும்!!!

இன்று சிரியா நாடு இருக்கும் நிலையில், பெரும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கவே நீதிமன்றங்கள் செயல்படாத நிலையில், எவ்வித அரச நிறுவனங்களும் ஒழுங்காக செயல்படாத நிலையில், இது போன்ற விடயங்களை விசாரிக்க எவ்வித நீதிமன்றகளும் இல்லை. சிரியாவில் பாடசாலைகளே ஒழுங்காக செயல்படுவதில்லை.

மேற்படி போலியான தகவலுக்காக இணைத்து வெளியிடப்பட்ட புகைப் படத்தினைக்கொண்டே அது எவ்வளவு தூரம் போலியானது என்பதனை புரிந்து கொள்ளலாம்.

உண்மையில் அந்தப் புகைப்படம், ஒரு பெண்ணை கல்லால் அடித்து கொல்வது போன்ற காட்சி ஆகும், இது ஒரு சினிமா படத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். அந்தப் படத்தின் பெயர் "The Stoning of Soraya M". அந்தக் காட்சியில் நடித்தவர் Mozhan Marno என்ற ஈரானிய நடிகை ஆவார்.

2010 ஆம் ஆண்டு சைரஸ் நவ்ரஸ்தேஹ் என்பவரால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அந்த திரைப் படத்தில் ஈரானில் உள்ள ஒரு கிராமத்தில் மேற்படி கதை நடப்பதாக ஒரு காட்சி அமைத்திருந்தார்கள். அப்போது அந்தப் படம் ஈரானில் தடை செய்யப்பட்டு இருந்தது.

மேற்படி திரைப்படம் குறித்த மேலதிக தகவல்களை இந்த இணைப்பில் சென்று பார்வையிடலாம்.

http://en.wikipedia.org/wiki/The_Stoning_of_Soraya_M.