பாஜக முன்னால் அமைச்சர் கைது
நரேந்திர மோடியின் பிரதமராக பதவியெற்றதையோட்டி கர்நாடக மாநிலம் பிஜாப்பூரில் பாஜவினரின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த முன்னால் மத்திய அமைச்சர் பசனகெளடா பாட்டீல் யத்னாவை போலீஸார் கைது செய்தனர்.
தில்லியில் திங்கள் கிழமை நடைபெற்ற விழாவில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றதையொட்டி, பிஜாப்பூரில் பாஜவினர் இனிப்பு வழங்கி, வெடி வெடித்துக் கொண்டாடினர். அப்போது பாஜகவினருக்கும், அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அது கலவரமாக மாறியது இது தொடபாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைத்தி வந்தனர் .
இதன் நிலையில், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் சித்தரமையா உத்தரவிட்டிருந்தார்.
அதையெடுத்து, மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த முன்னால் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த பிரமூகர்களில் ஒருவருமான பசனகெளட பாட்டீல் யத்னாலை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
0 comments for "பாஜக முன்னால் அமைச்சர் கைது "