சர்வாதிகாரத்தை முன் நிறுத்தும் இந்தியத் தேர்தல்....?
நமது தேர்தல் முறை சனநாயகத்தை வலுபடுத்துவதாக சொல்ல முடியவில்லை...
பல நேரங்களில் மக்கள் உணர்வு அளவுக்கு மீறி வெளிப்படுத்தப் படுகிறது.
ஒரு கட்சிக்கு அளவுக்கு அதிகமாக வாக்களித்து விடுகின்றனர்.
கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வலுவான எதிர்கட்சி இல்லாத நிலை ஏற்பட்டது.அதே போல தற்போது நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்கட்சி இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது.....
வலுவான எதிர்கட்சி இல்லாத சூழல் .....மக்களின் உணர்வை பிரதிபலிப்பதாக இல்லை... ஒரு சார்பான கருத்திற்கு மட்டுமே இடமளிக்கிறது.
இன்றைய தேர்தல் முறை கட்சியிலும் சமூகத்திலும் சர்வதிகாரத்திற்கே இடமளிக்கிறது.
இன்றைய தேர்தல் முறை 4.1 சதவீத வாக்கு வாங்கிய
பகுசன் சமாச் கட்சிக்கு எந்த பிரதிநிதித்துவமும்
இல்லை.
அதே போல் 3.3 சதவீத வாக்கு வாங்கிய மார்க்சிஸ்ட் கட்சிக்கு
9 சீட்டு தான் கிடைத்துள்ளது.
அதே அளவு சதவீத வாக்கு வாங்கிய திரிணாமுல் காங். 34 சீட்டு பெற்றுள்ளது.
ஆம் ஆத்மி 2.1 சதவீதம் வாக்கு பெற்றாலும் 4 சீட்டு மட்டுமே
கிடைத்துள்ளது.
31 சதவிகிதம் வாக்கு வாங்கிய பாஜக 282 சீட்டு பெற்றுள்ளது.
19.3 சதவீதம் விகிதம் வாக்கு வாங்கிய காங்கிரஸ் கட்சி 44 சீட்டு பெற்றது. இவர்களுக்கும் பாஜகவுக்கும் ஒட்டு வித்தியாசம் என்றால் 5 கோடி வாக்குகள் தான் வித்தியாசம்.....
குறைந்த வாக்கு வாங்கிய கட்சிக்கு எந்த பிரதிநிதித்துவம் இல்லாதது மட்டுமல்ல..... அவர்களுக்கு அளித்த வாக்கு வீணான நிலைக்கு வழியாகியுள்ளது.
இதன் விளைவாக தலித் மக்கள்....சிறுபான்மை மக்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையிலும் விகிதாச்சார பிரதிநிதித்துவமே அவர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்கும்...
விகிதாச்சார பிரதிநித்துவம் மட்டுமே மக்களிடம் வாக்கு
வாங்கியதற்கும் ....வாக்களித்தற்கும் என்று பொருள் இருக்கும்...... என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்...!
கா.சே.பாலசுப்ரமணியன்
0 comments for "சர்வாதிகாரத்தை முன் நிறுத்தும் இந்தியத் தேர்தல்....?"