ஆனந்த் பட்வர்த்தனின் குமுறல்.

ஆனந்த் பட்வர்த்தனின் குமுறல். 
***************************************

எடியூரப்பா ஊழல்வாதி இல்லையா? அமித் ஷா ஊழல்வாதி இல்லையா? நிதின் கட்காரி ஊழல் செய்யவில்லையா? முண்டேக்களும் தாக்கரேக்களும் இத்யாதிகளும் ஊழலில் ஊறித் திளைக்கவில்லையா? 

ஊழலுடன் குரூரமும் கொடூரமும் சேர்ந்து கொள்ளும் போது அது இன்னும் அருவருப்பானதாய், கண்டனத்திற்குரியதாய், கேவலமானதாய் ஆகிவிடுவதில்லையா? ஒரிஸ்ஸாவில் ஸ்டேய்ன்ஸ் குடும்பத்தையே உயிரோடு எரித்தவர்களும் மாலிகாவுனிலும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ்ஸிலும் மக்கா மஸ்ஜிதிலும் குண்டு வீசி, தகர்த்து, மனிதர்களைக் கொன்றவர்களும் (பழியை முஸ்லிம்கள் மீது போட்டவர்களும்) நாடு முழுக்க தலித்களை கற்பழித்தும் கொன்றவர்களும் நல்ல இந்துக்களா? 

விழித்தெழுங்கள், நண்பர்களே. மனிதர்கள் - அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நல்லவர்களாகவும் இருப்பார்கள். குரூரமானவர்களாகவும் இருப்பார்கள். எனவே தங்களுடைய மதமே உயர்வானது எனத் தூக்கி வைத்துக்கொண்டாடிக் கொண்டு மற்றவர்களுக்குத் தீங்கிழைப்பதற்குத் தங்களின் மதம் தங்களுக்கு அனுமதி அளிப்பதாக நினைக்கின்றவர்கள் ஆர். எஸ். எஸ்ஸானாலும் சரி, தாலிபான்களானாலும் சரி, அவர்கள் உண்மையில் விஷத்தைப் பரப்புகின்றவர்களே. இந்த விஷத்தை நீங்கள் விழுங்கிவிட்டிருந்தீர்களானால் உடனடியாக அதனைத் துப்பிவிடுங்கள். விஷத்தைத் துப்பிவிட்டு உங்களை நீங்களேக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். ‘

இந்தத் தடவை தாங்கள் செல்வந்தர்களாகிவிடுவோம் என்கிற நினைப்பில் என்னுடைய நாட்டு மக்களில் ஏராளமானோர் இந்த விஷத்தை அருந்திவிட்டிருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் போது எனக்கு வேதனையும் வருத்தமும்தாம் ஏற்படுகின்றன. அம்பானியாகவோ அடானியாகவோ இருந்தால்தான் உங்களை இந்த அரசாங்கம் மேன்மேலும் செல்வந்தர்களாக்கும். அரசாங்கம் உங்களைப் பணக்காரர்களாக்காது. அதற்கும் மேலாக உங்களுடைய ஆன்மாவும் செத்துப் போகும். 

- ஆனந்த் பட்வர்த்தன்.

Posted by tamilnadu on 10:23 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "ஆனந்த் பட்வர்த்தனின் குமுறல். "

Leave a reply