இஸ்லாமியர்களும் தேவேந்திரர்களும் ஒரு தாய் மக்களா?...



அன்பும் பாசத்திற்குறிய தேவேந்திர சொந்தங்களே, இளைஞர்களே வணக்கம்.

நம் சகோதரர்களின் சமீபத்திய பதிவுகளில் இஸ்லாமியர்களைப் பற்றியும் நம் சமூகத்தைப்பற்றியும் முரன்பாடான கருத்துக்கள் பகிறப்பட்டு வருவது கவலையை அளிக்கிறது. இது பற்றி சார்பில்லாத நிலயில் கருத்துக்களை விவாதிக்கப்படுவது மிக அவசியமாகிறது.

1. தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் யார்?
2. நம் சமூகத்திற்கு எதிராக அல்லது ஆதரவாக செயல் படுகின்றனரா?
3. அரசியல் ரீதியான செய்பாட்டில் இஸ்லாமியர்கள் தேவேந்திரர்களுக்கு என்ன துரோகம் செய்தனர்?
4. RSS- இஸ்லாம் மத வெறியர்களுக்கும் நமக்கும் என்ன தொடர்பு?

தமிழ்நட்டில் , குறிப்பாக தென் மாவட்டங்களில் வாழும் இஸ்லாமியர்கள் அரபு / பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் கிடையாது. இந்து மத சானாதான அடக்குமுறைகளை தாங்க முடியாமல் ,இந்துத்துவா கொடுமைகளிலிருந்து தற்காத்துக்கொள்ளவே மதம் மாறியிருக்கிறார்கள். உண்மையில் அவர்களும் இம்மண்ணின் மைந்தர்கள் தான். உ.தா. செங்கோட்டை மீனாட்சிபுரம் இந்துத்துவா கோட்பாடுதான் நம் சகோதரர்களை நம்மிடம் இருந்து பிரித்ததோடு மட்டுமல்லாது எதிரிகளாக சொல்கிறது. நமக்குள் சண்டைமூட்டக்கூடிய கருத்தியல்களை விதைக்கிறது.
தனிப்பட்ட காரணங்களைத்தவிர , சமூகமாய் இஸ்லாமியர்கள் தேவேந்திரர்களுக்கு எவ்வித கெடுதல்களோ, விரோதமான நடவடிக்கைகளிலோ ஈடுபட்டது கிடயாது. மாறாக பல்வேறு இடங்களில் ஆதரவு நிலையே எடுத்திருக்கிறார்கள்.
முன்பு என்னுடைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதைப் போலவே அடக்குமுறை செய்பவர்களும், அடக்குமுறைக்கு உள்ளானவர்களும் அமைப்பு ஏற்படுத்தி தீவிரமாக செயல் பட்டால் யார் வெறியர் ? நிச்சயமாக இஸ்லாமியர்கள் இல்லை.

RSS – இந்துத்துவா கொள்கையை ஓங்கி பிடிக்கும் ஓர் நிறுவனமாகும் அய்யனார் .மதுரைகருப்பசாமி , முனியாண்டி மாரியம்மன் வாழவந்தாள் மற்றும் முருகன் உள்ளிட்ட அனைத்து நம் குலதெய்வங்கள் இந்துக்கள் சாமி என்று சொல்ல காரணம் என்ன? இந்துத்துவா கொள்கையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பத்ற்காகவே. இதுதான் RSS- ன் சூழ்ச்சி. இதை மையப்படுத்தி பாரதீய ஜனதா கட்சி தற்பொழுது தேவேந்திர குல மக்களை பிளவுபடித்தி , மதகலவரங்களை தூண்டவும், அதாயம் தேடவும் முயற்சிபது வெட்ட வெளிச்சமாக தெறிகிறது. 

நம் இளைஞர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டு என கேட்டுக் கொள்கிறேன்

எனவே இஸ்லாமியர்கள் நம் சகோதரர்கள். அவர்களோடு இணைந்து நாமும் ஓர் அணியாக நின்று சமூக, அரசியல் தளங்களில் செயல் பட்டு அதிகார பகிர்வை பெற முயற்சி மேற்கொள்ளவேண்டும் —

தேவேந்திர குலம்- மள்ளர் இனம் 

Posted by tamilnadu on 11:24 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

0 comments for "இஸ்லாமியர்களும் தேவேந்திரர்களும் ஒரு தாய் மக்களா?..."

Leave a reply